தமிழ்நாடு
கும்பகோணம் அருகே பால்கோவா வியாபாரியிடம் ரூ.2.29 லட்சம் பறிமுதல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.29 லட்சத்தை தேர்தல் பறக்கும்
கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.29 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருபுவனம் பேரூராட்சி அலுவலகம் அருகே, தோ்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அந்த காரில் ரூ.2.29 லட்சம் ரொக்கம் இருந்தது.
இதுகுறித்து காரில் இருந்த நபரிடம் விசாரித்த போது, அவர் திருச்சி கள்ளத்தெருவைச் சோ்ந்த ராஜதுரை மகன் பாண்டியன் (35) என்பதும், மயிலாடுதுறைற பகுதியில் பால்கோவா வியாபாரத்தை முடித்து வந்ததும் தெரிய வந்தது.
ஆனாலும், பணத்துக்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்த பறக்கும்படையினர், திருவிடைமருதூா் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவற்றை ஒப்படைத்தனர்.