மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். திருச்சியில் போட்டியிட எனக்கு ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி.
நாட்டு மக்களுக்காக மோடி எதுவும் செய்யவில்லை. அவர் மீது மக்களுக்கு வெறுப்புதான் அதிகம் உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. ராகுல் காந்தி பிரதமராவார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய வர உள்ளார். தமிழகத்தில் பிரியங்கா பிரசாரம் செய்ய வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார் என்றார்.