அருணாசலேஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.96 லட்சம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.96 லட்சம் ரொக்கம், 180 கிராம் தங்கம், 663 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு ஒரு மாதத்தில் ரூ.96 லட்சம் ரொக்கம், 180 கிராம் தங்கம், 663 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு தினமும் உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம்தோறும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். எனவே, ஒவ்வொரு மாதமும் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். அதன்படி, மே மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர்கள் ஜான்சி ராணி (திருவண்ணாமலை), பிரகாஷ் (மேல்மலையனூர்) ஆகியோர் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.96 லட்சம் ரொக்கம்: இதில், ரூ.95 லட்சத்து 90 ஆயிரத்து 183 ரொக்கம், 180 கிராம் தங்கம், 663 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். 
ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com