நாட்டை மீண்டும் ஆளுகின்ற உரிமை மோடிக்கே உள்ளது என்பதுதான் தேர்தல் முடிவாக வந்துள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் 38 தொகுதிகளில் 37-ஐ திமுக அணி வாரிச் சுருட்டியது. ஆளும் அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனிடையே தேர்தல் முடிவுகள் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், நாட்டை மீண்டும் ஆளுகின்ற உரிமை மோடிக்கே உள்ளது என்பதுதான் தேர்தல் முடிவாக வந்துள்ளது என்றார். அதேபோல தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிதான் தொடர வேண்டும் என்ற நல்ல தீர்ப்பும் வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.