மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரி வியாழக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, மு.க.அழகிரி அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், மக்களவைத் தேர்தலில் தாங்கள் அடைந்துள்ள பெறும் வெற்றிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பிரதமராக நீங்கள் நியமிக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உங்கள் தலைமையில் நாடு முன்னேற்றம் அடையவும், எதிர்காலத் திட்டங்களில் உங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தி வெற்றியடைவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.