தேர்தல் வெற்றியை தொடர்ந்து சென்னையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.
பாஜகவும், காங்கிரஸூம் தேசியக் கட்சிகளாகும். ஆனால், அதற்கு அடுத்த இடங்களை மாநிலக் கட்சிகளே பெற்றுள்ளன. மாநிலக் கட்சியான திமுக தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வெற்றியையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை சி.ஐ.டி காலனி இல்லம் சென்று ராஜாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அவர் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.