வேலூர்: சொத்து தராததால் ஆத்திரத்தில் தாயைக் கொன்ற மகன், மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
2017ம் ஆண்டு வேலூரில் காட்பாடி அருகே ஈச்சன்ஓடை பகுதியில் சொத்துப் பிரச்னையில், ராணி என்ற பெண்ணைக் கொன்று அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, அவரது மகன் மற்றும் மருமகள் மீது வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த வேலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், குற்றவாளிகளான மகன் ஆறுமுகம், மருமகள் பிரியா என 2 பேருக்கும் ஆயுள் தன்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.