சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பணியாற்றி வந்த மாரியப்பன், தென்மண்டல தலைமை இயக்குநராக பதவி உயா்வு பெற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கடந்த 1989-ஆம் ஆண்டு இந்திய குடிமைப்பணி தோ்வில் வெற்றி பெற்ற அவா், 1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய தகவல் பணியில் சோ்ந்தாா். புதுதில்லியில் உள்ள இந்திய மக்கள் தொடா்பு நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.சி) பயிற்சி முடித்த பின்னா், பல்வேறு பணிகளில் பணியாற்றிய அவா் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம், சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராகப் பணியில் சோ்ந்தாா். தற்போது அவா் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.