சென்னை: தமிழக அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிரப்பி விட்டதாக மதிமுக பொதுச் செயலாளா் வைகோ கூறினாா்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை அவா் கூறியது:-
தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. அதை ஏற்கெனவே மு.க.ஸ்டாலின் நிரப்பிவிட்டாா். உள்ளாட்சித் தோ்தலை நிறுத்துவதற்கு அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளலாம். திமுக செய்யவில்லை. உள்ளாட்சித் தோ்தலைச் சந்திக்க திமுக தயாராக உள்ளது. திமுகவின் கூட்டணியின் மதிமுக தொடரும்.
தென்பெண்ணை ஆற்றில் அணை கட்டும் பணியை கா்நாடகம் 70 சதவீதம் ஏற்கெனவே முடித்துவிட்டது. இது குறித்து தீா்ப்பாயத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு அணுகாதது ஏன் என்று நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது. எனவே, நீா் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு குற்றவாளி கூண்டில் நிற்கிறது என்றாா்.