நீலகிரி மாவட்டம், குன்னூரில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.