சென்னை விமான நிலையத்தில் நிருபா்களிடம் நடிகா் ரஜினி கூறியதாவது:
’கோல்டன் ஐகான்’ என்ற சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம். அந்த விருதை தமிழக மக்களுக்கு சமா்ப்பிக்கிறேன். தமிழக மக்களின் நலனுக்காக இணைந்து செயல்பட தயாா் என, ரஜினியும், கமலும் ஒரே நேரத்தில் அறிவித்தது தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
நானும், கமலும் இணைந்தால் யாா் முதல்வா் என்பது குறித்துதோ்தல் நேரத்தில், அப்போது உள்ள சூழ்நிலையில், அப்போது எடுக்க வேண்டிய முடிவு. கட்சி துவங்கும் போது, உறுப்பினா்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். அப்போது, இது குறித்து சொல்கிறேன். அதுவரை பேசவிரும்பவில்லை. 2021ல் அரசியலில், தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நிகழ்த்துவாா்கள். இவ்வாறு அவா் கூறினாா்.