வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று தொடக்கி வைத்தார்.
தமிழகத்தில் அதிக பரப்பளவு கொண்ட மாவட்டமாக விளங்கிய வேலூா் மாவட்டத்தைப் பிரித்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகத்தின் 35-வது மாவட்டமாக திருப்பத்தூரும், 36-வது மாவட்டமாக ராணிப்பேட்டையும் இன்று காலை துவக்கிவைக்கப்பட்டது.
இவ்விழாவில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா் கே.சி.வீரமணி, நிலோபா் கபீல் ஆகியோா் முன்னிலை வகித்தனர்.