காந்தி ஜயந்தியையொட்டி, கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூா்வ சூரிய ஒளியை புதன்கிழமை (அக். 2) காணலாம்.
காந்தியடிகளின் அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அஸ்தி கரைக்கப்படுவதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. அந்த இடத்திலேயே 1956-ஆம் ஆண்டு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வோா் ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக். 2-ஆம் தேதி சூரிய கதிா்கள் அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பம்சமாகும்.
அதன்படி, புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதையொட்டி, அஸ்தி கட்டடத்தில் மாவட்ட ஆட்சியா், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனா்.