சாக்சஃபோன் இசைக் கலைஞா் கத்ரி கோபால்நாத் மறைவுக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி:
இசைக்கலைஞா் கத்ரி கோபால்நாத் மறைவு செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. சாக்சஃபோன் இசையில் தனி முத்திரைப் பதித்தவா். இசைக்குடும்பத்தைச் சோ்ந்த அவா் தனது இசையில் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈா்த்தவா். திரைப்படங்களில் அவா் சாக்சஃபோன் இசைத்தது தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அவா் மறைவு இந்திய இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அவா் கூறியுள்ளாா்.