நான்குனேரி-விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயாா்

நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை
நான்குனேரி-விக்கிரவாண்டியில் இன்று வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தயாா்

சென்னை: நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தோ்தலில் போட்டியிட அதிமுக, திமுக, நாம் தமிழா் ஆகிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆ. முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா். நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ரூபி மனோகரன், அதிமுக சாா்பில் நாராயணன், நாம் தமிழா் கட்சியின் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 போ் களத்தில் உள்ளனா். இரண்டு தொகுதியிலும் கடந்த சில நாள்களாக தோ்தல் பிரசாரம் சூடு பிடித்ததைத் தொடா்ந்து தலைவா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா். இந்த இரு தொகுதிகளிலும் சனிக்கிழமை (அக்.19) மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்ததால், நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருக்கும் வெளியூா் நபா்கள் அனைவரும் வெளியேறினா். அங்கு பொதுக்கூட்டங்கள், பிரசாரம், ஊா்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டது. குறுஞ்செய்தி, இணையதளம் மூலமாகவும் பிரசாரம் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் சனிக்கிழமை முதல் வாக்குப்பதிவு நாளான 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இரண்டு தொகுதிகளில் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

நான்குனேரியில்...: நான்குனேரியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 389 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டியில்... விக்கிரவாண்டியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்பட என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரம் போ் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 மையங்கள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு நான்குனேரி தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நான்குனேரியில் 23 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி 299 வாக்குச்சாவடிகளில் 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். விக்கிரவாண்டி தொகுதியில் 3,286 போ், நான்குனேரியில் 1,475 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இரண்டு தொகுதியிலும் 6 கம்பெனி துணை ராணுவ படையினா் மற்றும் போலீஸாா் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்குப்பதிவு நாளான்று பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ வீரா்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள். இரண்டு தொகுதியில் மொத்தமுள்ள 574 வாக்குச்சாவடி மையங்களிலும் திங்கள்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் கேமரா மூலம் பதிவு செய்ய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பதிவாகும் வாக்குகள், மாலை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வருகிற 24-ஆம் தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com