வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணிகளில், கட்சியினர் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டுமென அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
வாக்காளர் பட்டியலை பிழையின்றி திருத்தும் வகையில் வரும் 30-ஆம் தேதி வரை வாக்காளர்களே தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து அக்டோபர் 15-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியில் கட்சியின் அனைத்து நிலைகளிலும் உள்ளவர்கள் ஈடுபட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.