உத்திரமேரூர் அருகே இரும்பு தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், நேற்று நள்ளிரவு திடீரென பாய்லர் வெடித்தது. இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் அவர்களில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மூவருமே உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.