திமுக மீது அதிமுக புகார் மனு

அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக திமுக மீது அதிமுக புகார் மனு அளித்துள்ளது. 


அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக திமுக மீது அதிமுக புகார் மனு அளித்துள்ளது. 
இதுகுறித்து, அதிமுகவைச் சேர்ந்த வழக்குரைஞர் பிரிவினர், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புதன்கிழமை அளித்த புகார் கடிதத்தின் விவரம்:- தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் எழுதவோ, சுவரொட்டி ஒட்டவோ கூடாது என நெறிமுறை உள்ளது. ஆனால், தென் சென்னையில் நெறிமுறை மீறி திமுக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
தேர்தல் நெறிகளை மீறிய தென் சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் சைதாப்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மீது தேர்தல் நடத்தை நெறிமீறல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் அதிமுக தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com