புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி அச்சத்துடன் தேர்தல் பிரசாரம் செய்து வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், தமிழ்நாட்டு மக்களுக்கும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மோடி நாடு முழுவதும் சென்று, சாதனைகள் எனக் கூறிக் கொண்டு சுயதம்பட்டம் அடித்து வருகிறார். அப்படியே அவரது உண்மையான சாதனைகளான பண மதிப்பிழப்பு, சிறு மற்றும் குறு தொழில்களை அழித்தது, 4.7 கோடி பேர் வேலையிழந்தது, பெண்கள், தலித், சிறுபான்மையினர், பழங்குடியினர், எழுத்தாளர்கள், கலைஞர்கள், என்ஜிஓ.,கள் உள்ளிட்டோர் பாதுகாப்பற்று இருப்பது ஆகியவை குறித்தும் பேசலாமே.
பிரதமர் ஏன் நாளுக்கு நாள் குரலை உயர்த்தி பேசி வருகிறார்? தனது ஆட்சி போய்விடும் என்ற பயத்துடன் பிரசாரம் செய்வதாலா? தமிழ்நாட்டில் நேற்று பேசிய மோடி பேசாத பொருள்களைப் பட்டியலிடுங்கள்,
தமிழ்நாட்டில் நேற்று பேசிய திரு மோடி பேசாத பொருள்களைப் பட்டியலிடுங்கள்
1. நீட் தேர்வு
2. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு
3. நெடுவாசல் எரிவாயு சோதனைத் திட்டம்
4. அஇஅதிமுக அரசு மீது பதிவான ஊழல் குற்றச்சாட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார்.