சென்னை: கோடநாடு விவகாரம் குறித்து முதல்வரும், எதிக்கட்சித் தலைவரும் பேசக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் பேசக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.
உதகை நீதிமன்றத்தில் வழக்கு முடியும் வரை இரு தரப்பினரும் கோடநாடு விவகாரம் குறித்துப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் உள்ள எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.