தினகரன் மட்டுமே நல்லவர்.. மற்றவர்கள் ஊழல்வாதிகள்: சுப்பிரமணியன் சுவாமி  

தினகரன் மட்டுமே நல்லவர் மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகளாக இருப்பதால் தேசிய கண்ணோட்டத்தோடு இருக்கும் தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு
தினகரன் மட்டுமே நல்லவர்.. மற்றவர்கள் ஊழல்வாதிகள்: சுப்பிரமணியன் சுவாமி  


தினகரன் மட்டுமே நல்லவர் மற்றவர்கள் எல்லாம் ஊழல்வாதிகளாக இருப்பதால் தேசிய கண்ணோட்டத்தோடு இருக்கும் தினகரனின் அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கேட்டுக்கொண்டுள்ளார். 

17-வது மக்களவைக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மார்ச் 10-இல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிரம் காட்டினர். பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். அனல் பறக்க நடைபெற்ற பிரசாரம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்.16) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. வரும் 18-ஆம் தேதி காலை 7 முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக அரசியல் என ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டும், குறிப்பாக பாஜவின் பல்வேறு நிலைப்பாடுகளுக்கு எதிராக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி. 

இந்நிலையில், வரும் 18 ஆம் நடைபெறும் மக்களவைக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் தமிழக மக்கள் அனைவரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்க பதிவில், விஸ்வ ஹிந்து பரிஷித்தில் உள்ள ஒரு தேசியவாதியாக தமிழகத்தின் தற்போதைய நிலையை நான் ஆய்வு செய்து பார்த்துள்ளேன். தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஊழல் கட்சிகள். ஆனால் தினகரனின் அமமுக கட்சிக்கு தேசிய ஒற்றுமை உணர்வு உள்ளது. எனவே, தமிழக மக்கள் அனைவரும் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு இந்த முறை வாக்களிக்க வேண்டும் என வலியுத்தி உள்ளார்.

After reviewing with VHS the TN situation I  feel nationalists in TN should vote for Amma Party of Dinakaran. As for corruption all TN parties same . But Dinakaranis good for national unity - Subramanian Swamy

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com