தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ரு.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.
நேற்று இரவு ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது காவலர்களை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
மேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு பண்டல் பண்டலாக இருந்த ரூ.1.48 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. அப்போது அமமுக அலுவலகத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.