சென்னை: தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
வாக்காளர்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் சத்யபிரதா சாகு செயல்முறை விளக்கம் அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், மாவட்ட தேர்தல் அதிகாரிக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில்தான் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
ஆண்டிப்பட்டியில் பண்டல் பண்டலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.