தேர்தல் ஆணையம் சீர்திருத்தப்பட வேண்டும்

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதால் ஆணையத்தை சீர்திருத்தும் பணிகளைச் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்
தேர்தல் ஆணையம் சீர்திருத்தப்பட வேண்டும்

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதால் ஆணையத்தை சீர்திருத்தும் பணிகளைச் செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடப்பதாக அறிந்தோம். அதே தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசைசெளந்தரராஜன் வீட்டில் கோடி,கோடியாகப் பணம் இருக்கிறது. அங்கு ஏன் சோதனை நடத்தவில்லை. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதால் தேர்தல் ஆணையத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அதிமுகவினர் தோல்வி பயத்தில் உள்ளனர் என்றார் மு.க.ஸ்டாலின்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com