எதிர்க்கட்சித் தலைவர்களை பற்றி  மட்டும் எப்படி துப்பு கிடைக்கிறது?: ப.சிதம்பரம் கேள்வி

எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டும் வருமான வரித் துறைக்கு எப்படித் துப்பு கிடைக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
pc
pc


எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டும் வருமான வரித் துறைக்கு எப்படித் துப்பு கிடைக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் அவரது சுட்டுரையில் கூறியிருப்பது: 
கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய  சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி.  அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது? 2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தின் அடையாளமே வருமான வரித் துறையின் பாரபட்சமான நடவடிக்கைகள்தான் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com