மு.க.ஸ்டாலினுடன் வைகோ, தொல்.திருமாவளவன் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சனிக்கிழமை சந்தித்தனர்.சென்னை அண்ணா அறிவாலயத்தில்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் சனிக்கிழமை சந்தித்தனர்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை வைகோ சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் வைகோ கூறியது:
திமுக கூட்டணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் திமுகவுக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம். தருமபுரி நத்தம்மேடுவிலும், சிதம்பரம் பொன்பரப்பியிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றார் வைகோ.
தொல். திருமாவளவன்: மு.க.ஸ்டாலினை தொல்.திருமாவளவனும் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியது: தமிழகம் முழுவதும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ததற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தோம். 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுகவின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரசாரம் மேற்கொள்வோம். மக்களவைத் தொகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். சிதம்பரம் தொகுதியில் அடங்கிய பொன்பரப்பியில் மீண்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com