முதல்வருடன் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சந்திப்பு

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.


முதல்வர் எடப்பாடி பழனிசாமியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
 கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினரான செல்லக்குமார்,  சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை  திங்கள்கிழமை சந்தித்தார். அப்போது கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுத்தார்.
மனுவில் கூறியிருப்பது: கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட விவசாயிகளின் கனவுத் திட்டம் எண்ணேகொள்புதூர் அணைக்கட்டு பகுதியிலிருந்து படேதலாய் ஏரிக்கு கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பல்வேறு ஏரிகளில் நிரப்பும் திட்டமாகும். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பு விவசாயிகள் முழுமையாகப் பயன் அடைவர். 
 இந்தத் திட்டத்துக்காக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ரூ.276 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடப்பட்டது. ஆனாலும், பல்வேறு காரணங்களால் திட்டப்பணிகள் இன்னும் தொடங்காமல் உள்ளன. இந்தத் திட்டத்தை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com