சென்னை: தனது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மேலும் நான்கு பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக அருணாச்சலம் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மேலும் நான்கு பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சித் தலைவர் கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக புதனன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'கட்சியின் பொதுச்செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.