தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசிடமிருந்து பெற வேண்டும்: கனிமொழி

மத்திய பாஜக அரசின் எல்லா மசோதாக்களையும் ஆதரிக்கும் அதிமுக அரசு, மாநிலத்துக்குத் தேவையான நிதியைக் கேட்டுப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி கூறினார். 


மத்திய பாஜக அரசின் எல்லா மசோதாக்களையும் ஆதரிக்கும் அதிமுக அரசு, மாநிலத்துக்குத் தேவையான நிதியைக் கேட்டுப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி கூறினார். 
சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. தமிழக மக்கள் நன்றாக அறிந்த ஒரு தலைவர் ஸ்டாலின். அவர் நீலகிரி வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடுகிறார். ஆனால், முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமி நீலகிரிக்குச் செல்லாதது ஏன்? 
பாஜகவின் இன்னொரு கையாக அதிமுக செயல்பட்டு வருகிறது. மழை பாதிப்புக்குத் தேவையான நிதியையாவது மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு கேட்டுப் பெற வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com