குற்றாலம் பேரருவியில் குளிக்க காலையில் தடை; பிற்பகலில் அனுமதி

குற்றாலம் பேரருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் புதன்கிழமை காலையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது; பிற்பகலில் நீர்வரத்து குறைந்ததால் தடை நீக்கப்பட்டது.
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.


குற்றாலம் பேரருவியில்  தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் புதன்கிழமை காலையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது; பிற்பகலில் நீர்வரத்து குறைந்ததால் தடை நீக்கப்பட்டது.
குற்றாலம் மலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பெய்த பலத்த மழையால் பேரருவியில் புதன்கிழமை அதிகாலையிலிருந்து நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியதால் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர். பிற்பகலில் பேரருவியில் நீர்வரத்து குறைந்ததால் தடை நீக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலம் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மிதமான சாரலுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com