சுதந்திர நாளில் தியாகிகளை போற்றுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில்,
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை - மாநில உரிமை - ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம் என்றார்.