சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகின் மிகப் பழமையான நீராவி இஞ்சின் ரயில் சென்னையில் இன்று இயக்கப்பட்டது.
73ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தென்னக ரயில்வே சார்பில் உலகின் மிகப் பழமையான நீராவி இஞ்சின் ரயில் சென்னையில் இன்று இயக்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்ட இந்த ரயிலில் பொதுமக்கள் யாரும் பயணிக்கவில்லை. ரயில்வே ஊழியர்கள் மட்டும் பயணித்தனர். எனினும், ஏராளமானவர் பொதுமக்கள் ரயில் நிலையங்களில் கூடி நீராவி ரயிலைக் கண்டு மகிழ்ந்தனர்.
வழக்கமாக சுதந்திர தினத்தன்று இந்திய ரயில்வேயின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நீராவி இஞ்சின் ரயில் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.