சுதந்திரத் தினத்தையொட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
73-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில்: மக்கள் நீதி மய்யம் சார்பில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மெளரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மேலும், கட்சி அலுவலகத்தில் மாதிரி ஏரியா சபை கூட்டமும் நடைபெற்றது.