அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியேற்றம்

சுதந்திரத் தினத்தையொட்டி  திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.


சுதந்திரத் தினத்தையொட்டி  திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
73-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.
மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில்: மக்கள் நீதி மய்யம் சார்பில், ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மெளரியா தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். மேலும், கட்சி அலுவலகத்தில் மாதிரி ஏரியா சபை கூட்டமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com