ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாகவே அவர் தேடப்படுகிறார். இப்போது நடந்து கொண்டிருக்கிற நிகழ்வுகள் பொது வாழ்க்கையில் தூய்மை தேவை என்பதை வலியுறுத்துகிறது. மடியில் கனமில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள வேண்டியதுதானே.
இப்போது தூய்மையான ஆட்சி நடக்கிறது. இதற்கு முந்தைய ஆட்சியில் காங்கிரஸும், திமுகவும் தன்னாட்சி அதிகாரம் உள்ள அமைப்புகளை எவ்வளவு தவறாக, சுயலாபத்துக்காக பயன்படுத்தினார்கள் என்பதை ப.சிதம்பரத்தின் வழக்கின் மூலமாக இந்திய மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வர் என்று தனது அறிக்கையில் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.