சாதனைகளையும், சோதனைகளையும் எடைபோட்டு பார்ப்பதில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் பல்வேறு முக்கிய விவாதங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தொடர்ந்து மக்களை சந்திக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது, மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது.
தலைவராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுப்பெற்றதையடுத்து, என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சாதனைகளையும், சோதனைகளையும் நான் எடைபோட்டு பார்ப்பதில்லை.
சிலர் என்னை விமர்சித்து எழுதியுள்ளனர்; அதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.