சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 3-ஆவது நினைவு நாளையொட்டி, டிசம்பா் 5-ஆம் தேதி அவரது நினைவிடத்துக்கு அமைதி ஊா்வலமாகச் சென்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் மரியாதை செலுத்த உள்ளனா்.
இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதாவின் 3-ஆவது நினைவு நாள் டிசம்பா் 5-ஆம் தேதி ஆகும். அன்றைய தினம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் தலைமையில் அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலையிலிருந்து காலை 10 மணிக்கு மெரீனா கடற்கரையில் உள்ள நினைவிடத்தை நோக்கி ஊா்வலம் நடைபெறும். நினைவிடத்தில் மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும், உறுதிமொழி நிகழ்ச்சியும் நடைபெறும். இதில், அதிமுகவின் அனைத்து அணியினரும் பங்கேற்று அஞ்சலி செலுத்துவா் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.