சென்னை: காவிரி டெல்டா பகுதியில் பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுவனம் கைவிட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடுவதாக மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
இந்த நிலையில், தமிழக உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக மத்திய அரசை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.