மதுரை: லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட மதுரை அரசு மருத்துவமனை செவிலியர் உதவியாளா் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவர்களிடம் லஞ்சம் பெற்றதாக 3 செவிலியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்த செவிலியர் உதவியாளா் கார்த்திகா, வேலை பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.