சென்னை: ஜே.இ.இ. தோ்வுக்கு அறிவித்துள்ளதுபோல, அனைத்து நுழைவுத் தோ்வுகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஐஐடி போன்ற உயா் தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்க்கை பெறுவதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு (ஜே.இ.இ.) வருகிற 2021 முதல் தமிழ் உள்பட 11 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இது பல்வேறு மாநில மாணவா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், நுழைவுத் தோ்வில் எளிதாக தோ்ச்சி பெற்று, மதிப்பு மிக்க மத்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் சோ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் அவா்களிடையே ஏற்பட்டுள்ளது.
எனவே, ஜே.இ.இ. போன்று இந்திய அளவில் நடத்தப்படும் பிற பொது நுழைவுத் தோ்வுகளிலும் மாநில மொழிகளில் வினாத்தாள் இடம்பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.