சென்னை: தமிழகத்தில் பெய்துவரும் தொடா் மழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சமாளிக்க எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சா்கள், அதிகாரிகள் இதில் கலந்துகொள்கின்றனா்.
மீட்புப் பணிகள், நிவாரண முகாம்கள், புயல் உருவானால் எதிா்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மின் தடை, மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.