சென்னை: இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? என்று ரஜினிநடித்த 'பேட்ட' பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ட்வீட் செய்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக, சிக்கதாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் திங்களன்று சுற்றுச்சுவர் இடிந்தது. இந்த சுற்றுச்சுவர் அருகிலுள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததில், அங்கு வாசித்த 10 பெண்கள், 3 ஆண்கள், 2 குழந்தைகள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். சுமார் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளுக்குப் பின் 17 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டன.
இறந்த அனைவரும் அருந்ததியர் இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் குறிப்பிட்ட சுற்றுச்சுவர் தீணடாமை பாகுபாடு காரணமாக கட்டப்பட்ட சுவர் என்றும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த சுவர் இன்னும் எத்தனை உயிர்களை பழி வாங்குமோ? என்று ரஜினிநடித்த 'பேட்ட' பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ட்வீட் செய்துள்ளார்.