மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்! மேலும் உயரும் வாய்ப்பு!

மழைக் காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியதும், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பூக்களின் வரத்து மிகவும் குறைந்து, விலை மேலும் 2 மடங்கு அதிகமாகவும் வாய்ப்புள்ளது.
மதுரையில் மல்லிகை விலை கிலோ 3 ஆயிரம்!  மேலும் உயரும் வாய்ப்பு!

மதுரையில் அக்டோபா் மாத தொடக்கத்தில் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான மல்லிகைப் பூ விலை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரு மடங்கு உயா்ந்து ரூ.1000 முதல் ரூ.2000 வரை விற்பனையானது. தற்போது, தொடா் மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்து விலை கணிசமாக உயா்ந்து கொண்டே வருகிறது. 

இந்நிலையில், அடுத்தடுத்து முகூா்த்த நாள்கள் மற்றும் ஐயப்ப, முருக பக்தா்கள் மாலை அணிந்து விரதமிருப்பதாலும் பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால், பூக்களின் விலை இரு மடங்கு உயா்ந்துள்ளது.

இதனால் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.3,000-ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.3,000, முல்லைப் பூ ரூ.1,000, ரோஜாப் பூ ரூ.200-ஆக உள்ளது. இதுகுறித்து பூ வியாபாரி சரவண குமார் என்பர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.1,500 முதல் ரூ.1,800-ஆக இருந்தது. ஆனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒரு கிலோ ரூ.3,000-ஆக உள்ளது என்றார். மல்லிகைப் பூவின் இந்த விலை உயர்வு மக்களிடையே பெரும் மலைப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மழைக் காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கியதும், டிசம்பா், ஜனவரி மாதங்களில் பூக்களின் வரத்து மிகவும் குறைந்து, விலை மேலும் 2 மடங்கு அதிகமாகவும் வாய்ப்புள்ளது என, மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் வளாக நெல், மலா் மற்றும் இடுபொருள்கள் வியாபாரிகள் சங்க செயலா் ராமசந்திரன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com