தமிழ்நாடு
முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்
முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்.
சென்னை: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா திமுகவில் இருந்து விலகினார்.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த பழ. கருப்பையா, தற்போது திமுகவில் இருந்தும் விலகியுள்ளார்.
2011ம் ஆண்டு அதிமுக சார்பில் சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினரான பழ. கருப்பையா, கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்று குற்றம்சாட்டப்பட்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில், திமுக தலைவராக மறைந்த கருணாநிதி இருந்த போது, அவர் முன்னிலையில் பழ. கருப்பையா திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.