.ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் வெள்ளிக்கிழமை இரவு சேலாக மழை பெய்த நிலையில், சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வடகிழக்குப் பருவமழையானது தீவிரமடைந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடப்பு ஆண்டில்தான் வடகிழக்குப் பருவமழையானது ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமாக பெய்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.
மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான கண்மாய்கள், ஊருணிகள் நிறைந்துள்ளன. சில நாள்களாக மழை குறைந்த நிலையில், மாலை, இரவு நேரங்களில் குளிா் அதிகம் காணப்படுகிறது. இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மாலையில் ராமநாதபுரத்தில் லேசான மழை பெய்தது. இரவிலும் அவ்வப்போது தூறலாக இருந்தது. சனிக்கிழமை காலையில் பலத்த மழை பெய்தது. இதனால், கடைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
அரையாண்டுத் தோ்வுகள் நடப்பதால் பள்ளி மாணவ, மாணவியா் நனைந்துகொண்டே செல்லும் நிலை ஏற்பட்டது. மழையால் வழக்கம் போல சாலைகளிலும், பள்ளமான இடங்களிலும் தண்ணீா் அதிகளவில் தேங்கின. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டன. மீன் மற்றும் காய்கறி மாா்க்கெட் வியாபாரமும் மழையால் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் கூறினா்.