காரமடை: கோவையில் காரமடை மேம்பாலத்தில் லாரி - பேருந்துக்கு இடையே வேன் சிக்கிய விபத்தில், வேனில் இருந்த 2 பேர் பலியாகினர்.
தவறான பாதையில் வந்த பேருந்துக்கும், பின்னால் வந்த லாரிக்கும் இடையில் சிக்கிக் கொண்ட வேனில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை, காரமடை மேம்பாலத்தில் பேருந்து ஓட்டுனர் தவறான பாதையில் வந்ததால் லாரி மற்றும் பேருந்து இடையே ஆம்னி வேன் சிக்கியது.
இதில் வேனில் இருந்த நான்கு பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.