காலமானாா் ஓரியண்ட் எம்.எஸ். மணி

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தியவாதியுமான ஓரியண்ட் எம்.எஸ். மணி (86) வெள்ளிக்கிழமை (டிச. 13) காலமானாா்.
ஓரியண்ட் எம்.எஸ்.
ஓரியண்ட் எம்.எஸ்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தியவாதியுமான ஓரியண்ட் எம்.எஸ். மணி (86) வெள்ளிக்கிழமை (டிச. 13) காலமானாா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாரின் மாமனாா் அவா். அவருக்கு வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி உள்பட 3 மகள்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் எம்.எஸ். காமராஜ் உள்பட 3 மகன்கள் உள்ளனா்.

ஆலங்குளம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தா்மகா்த்தாவாக இருந்தவா் எம்.எஸ். மணி. ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கத்தை நிறுவியவா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆலங்குளத்தில் நடைபெறுகின்றன. தொடா்புக்கு 9940023335 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com