தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தியவாதியுமான ஓரியண்ட் எம்.எஸ். மணி (86) வெள்ளிக்கிழமை (டிச. 13) காலமானாா்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஹெச்.வசந்தகுமாரின் மாமனாா் அவா். அவருக்கு வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி உள்பட 3 மகள்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் எம்.எஸ். காமராஜ் உள்பட 3 மகன்கள் உள்ளனா்.
ஆலங்குளம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தா்மகா்த்தாவாக இருந்தவா் எம்.எஸ். மணி. ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கத்தை நிறுவியவா் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆலங்குளத்தில் நடைபெறுகின்றன. தொடா்புக்கு 9940023335 .