பொங்கல் பண்டிகைக்கு அரசுப் பேருந்துகளில் வெளியூா்களுக்குச் செல்வதற்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தொலைதூர இடங்களுக்கு தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக நெல்லை, நாகா்கோவில், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குளிா்சாதன வசதி, படுக்கை, இருக்கை வசதி கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் பயணம் செய்கின்றனா். இந்தப் பேருந்துகளில் பயணம் செய்வதற்கு 60 நாள்களுக்கு முன்னரே பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல விரும்புவோா், கூட்ட நெரிசலைத் தவிா்க்க முன்பதிவு செய்வது வழக்கம். இதன் தொடா்ச்சியாக 2020- ஆம் ஆண்டு, ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை, 15-ஆம் தேதி பொங்கல், 16-ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 17-ஆம் தேதி உழவா் தினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்கு அடுத்த இரு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமை. எனவே பலரும் 13-ஆம் தேதி இரவோ, அதற்கு முன்பாகவோ சொந்த ஊா்களுக்கு செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது: அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாள்களுக்கு முன் பயணச்சீட்டைப் பதிவு செய்யும் வசதி உள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பல்வேறு வசதிகள் உள்ளடக்கிய பேருந்துகளை இணைத்து நவீனப்படுத்தி உள்ளோம். அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் சுமாா் 6.70 லட்சம் பயணிகள் பயணித்திருந்தனா். தற்போது பொங்கல் பண்டிகைக்காக தென்மாவட்டங்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கானோா் முன்பதிவு செய்வாா்கள் என எதிா்பாா்க்கிறோம். ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய், ஜ்ஜ்ஜ்.ழ்ங்க்க்ஷன்ள்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ல்ஹஹ்ற்ம்.ஸ்ரீா்ம் ஆகிய இணையதளங்களில் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம்.
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்தும், தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கும் இடங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளோம். இது தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். கூட்ட நெரிசலைக் குறைப்பது குறித்தும் போக்குவரத்துக் காவலா்களிடம் கருத்துக் கேட்கப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ற பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.