சிவகாசி காடா துணி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் திங்கள்கிழமை காடா துணி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சிவகாசியில் திங்கள்கிழமை காடா துணி தயாரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி தொழில் பேட்டையில், அசோகன் என்பவருக்கு சொந்தமான காடா துணி தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் கழிவு பஞ்சு இருக்கும் பகுதியில் திடீரென தீ பிடித்ததாம்.

தகவல்அறிந்து சென்ற தீயணைப்பு படையினா் தீயை அணைத்தனா். இதில் கழிவு பஞ்சு தீயில் எரிந்து சாம்பலானது. மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com