குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், மதுரை மாவட்டம் மகபூப்பாளையம் ஜின்னா திடலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. 500 பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.