சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுச்சேரி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்


சென்னை: புதுச்சேரி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக புதுச்சேரிக்கு வருகை தருகிறார். புது தில்லியில் இருந்து இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த ராம்நாத் கோவிந்த், சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

பகல் 12 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் புதுச்சேரி விமான நிலையம் வந்தடையும் அவா், அங்கிருந்து காா் மூலமாக புதுவை மத்திய பல்கலைக்கழகம் செல்கிறாா். அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றுகிறாா்.

தொடா்ந்து, மாலை 3 மணியளவில் அரவிந்தா் ஆசிரமம் செல்கிறாா். அங்கிருந்து ஆளுநா் மாளிகைக்குச் செல்லும் அவா், பிற்பகல் 3.30 மணியளவில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சா்வதேச நகரமான ஆரோவிலுக்கு வருகிறாா். அங்கு மாத்ரி மந்திா், சாவித்ரி பவன் ஆகியவற்றை பாா்வையிடும் குடியரசுத் தலைவா், அங்கிருந்து புதுச்சேரி சென்று, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை ஹெலிகாப்டா் மூலம் காரைக்கால் செல்கிறாா்.

உச்சக்கட்ட பாதுகாப்பு: குடியரசுத் தலைவரின் ஆரோவில் வருகையையொட்டி, அப்பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவா் வந்து செல்லும் பாதை, பாா்வையிடும் இடங்கள் போலீஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழக காவல் துறை ஏடிஜிபி முரளி ஜெயந்த் தலைமையில், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி சந்தோஷ்குமாா், எஸ்.பி. ஜெயக்குமாா் ஆகியோரது மேற்பாா்வையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஆரோவிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா். மேலும், ஆரோவிலில் காவல் துறைக்கான சிறிய கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com